நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் துறைகளுக்கு இடையே பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது.
இதில் உபதலைவர் டெய்சிராணி, ராம்குமார், செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுய நிதிபாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், நடனப்பள்ளி நிறுவனர் அருள் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வசங்கரன் நன்றி கூறினார்.

