ADDED : பிப் 12, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை எஸ். பி.கே., கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் அறிவுரை வழங்கினார். தூய கணிதம், பயன்பாடு கணிதம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் ஆசைதம்பி தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் ராஜ் குமார் வரவேற்றார்.
சீனாவில் உள்ள பெய்பு கல்ப் பல்கலை கழகத்தின் குணசேகரன், திருச்சி ஜமால் முகமது கல்லூரி கணித பேராசிரியர் முகமது தையூப், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி இணை பேராசிரியர் கண்ணன் கலந்து கொண்டனர். 94 ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் ராஜா தாரிக் நன்றி கூறினார்.

