ADDED : ஜன 12, 2024 12:41 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பாக இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது.
விருதுநகர் விருச்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சியத்துடன் இணைந்து குந்தலப்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு தயாரித்த இயற்கை உரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர் முருகலட்சுமி குமாரி இயற்கை உரத்தின் முக்கியத்துவம், தயாரிக்கும் முறை பற்றி பேசினார். ஏற்பாடுகளை விஜயா செய்தார்.
