நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே மாத்திநாயக்கன்பட்டியில் குல்லுார் சந்தை ஸ்ரீ வீரப்பா வித்யாலய மேல்நிலைப்பள்ளியின் சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.
பள்ளி செயலாளர் ராம்குமார், தலைவர் ராஜாராமன், உப தலைவர் வீரசேகரன், பொருளாளர் சுந்தரராஜன், தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்றனர்.
திட்ட அலுவலர் வெள்ளைச்சாமி வரவேற்றார். கண், பொது மருத்துவம், தொழு நோய் சிகிச்சைக்கான சோதனைகள் நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தங்கமாரியப்பன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார்.
நிறைவு விழாவில் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் சைய்யது முகம்மது ஆரிப் பங்கேற்றார்.