நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரத்தினம் செவிலியர் கல்லூரியில் நடந்த செவிலியர் தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் தாமரைச்செல்வி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிந்துரேகா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
செவிலியர் சங்கம் சார்பாக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தாங்களாகவே தயாரித்த பாரம்பரிய உணவு வகைகள், அலங்கார பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்தனர்.