ADDED : டிச 25, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்,: விருதுநகர் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில், 7வது நாளாக நேற்று செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓராண்டிற்கு மேல் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் டிச. 18 முதல் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.
நேற்றைய போராட்டத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் சங்கீதா முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, தி ரேடியாலஜிகல் அசிஸ்டென்ட்ஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

