/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
/
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
ADDED : பிப் 01, 2024 06:45 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுட்பட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.ஆர்.பி., செவிலியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்த படி பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 70 எம்.ஆர்.பி., செவிலியர்கள் நேற்றும், இன்றும் கோரிக்கை அட்டைகளை அணிந்த படி பணிசெய்து வருகின்றனர். மாவட்டத்தில் அடுத்தகட்டமாக பிப். 3 ல் பேராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள கட்சித்தலைவர்களை பிப். 11 முதல் பிப். 17 வரை சந்தித்து ஆதரவு திரட்டப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.