/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி
/
லோடு ஆட்டோ மீது பஸ் மோதி ஒருவர் பலி
ADDED : பிப் 26, 2026 07:18 AM

சிவகாசி: சிவகாசியில் சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதியதில் டிரைவர் ஆர். கருப்பசாமி 50, பலியானார். 10 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்தவர் ஆர்.கருப்பசாமி.
இவர் லோடு ஆட்டோவில் சரக்கு ஏற்றிக்கொண்டு சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ராஜபாளையத்திலிருந்து திருச்சுழி அருகே ரெங்கையன் பட்டியைச் சேர்ந்த பி.கருப்பசாமி ஓட்டி வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற வாகனத்தை முந்துவதற்காக வேகமாக சென்றபோது லோடு ஆட்டோவில் மோதியது.
இதில் ஆட்டோ டிரைவர் ஆர்.கருப்பசாமி இறந்தார்.
ஆட்டோவில் வந்த முனியசாமி 50, பஸ்சில் வந்த பிளவாரி கருப்பசாமி, கீர்த்திகா உள்படம் 10 பேர் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

