ADDED : மே 27, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் 53. இவர் டூவீலரில் பட்டம்புதுார் விலக்கில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜாக்சன் ஏசையா 47, சாத்துார் நோக்கி ஓட்டிச் சென்ற கார் மோதியது.
இதில் ரத்தினவேல் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் பலியானார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.