sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

/

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 08, 2025 05:16 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் திறந்து கிடக்கும் மேன் ஹோலால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.

சாத்துார் நகராட்சியில் வெம்பக்கோட்டை ரோட்டின் இருபுறமும் வணிக நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வாறுகால் கட்டும் பணி நடந்தது. ரோட்டின் இரு புறமும் நடந்த இந்த பணியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டால் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்காக மேன் ஹோல் அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஆங்காங்கே மேன் ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. வெம்பக்கோட்டை ரோட்டில் மேட்டமலை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படும் மருந்தகம் முன்பு இதுபோன்ற அமைக்கப்பட்டுள்ள ஒரு மேன்ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.

திறந்து கிடக்கும் இந்த பகுதி ரோடு மட்டத்திற்கு உள்ளதால் வாகன ஓட்டிகள் பலர் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் முன் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us