sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு

/

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு


ADDED : டிச 11, 2024 04:46 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே சித்துராஜபுரம் வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு வாறுகால் கட்டும் பணி துவங்கியது. இந்த வாறுகால் கட்டப்பட்டால் இதன் வழியே வருகின்ற கழிவு நீர் டி.மானகசேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கலாபுரம் மன்னர் திருமலை நகரில் உள்ள கண்மாயில் கலந்து விடும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என கொங்கலாபுரம் பகுதி மக்கள் வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நேற்று காலை வழக்கம் போல வாறுகால் கட்டும் பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொங்கலாபுரம் பகுதி மக்கள் திரண்டு வாறுகால் கட்டும் இடத்திற்கு வந்தனர்.

டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க கூறினார். இதற்கிடையே வாறுகால் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொங்கலாபுரம் மக்கள் சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். சப் கலெக்டர் அவர்களிடம், வாறுகால் கட்டும் பணி நிறுத்தப்பட மாட்டாது தொடர்ந்து நடைபெறும் என கூறினார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us