ADDED : மே 13, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருத்தங்கல் சிவகாசியில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து இனிப்பு அன்னதானம் வழங்கினார். மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுபாஷினி தலைமையில் பெண்கள் சிவன் கோயிலில் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பு பூஜை செய்தனர்.