/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த வெளி கழிப்பறையால் செவல்பட்டியில் நோயாளிகள் அவதி
/
திறந்த வெளி கழிப்பறையால் செவல்பட்டியில் நோயாளிகள் அவதி
திறந்த வெளி கழிப்பறையால் செவல்பட்டியில் நோயாளிகள் அவதி
திறந்த வெளி கழிப்பறையால் செவல்பட்டியில் நோயாளிகள் அவதி
ADDED : ஜன 26, 2025 04:48 AM
சிவகாசி : வேம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் செலலும் பாதை திறந்தவெளி கழிப்பறையாக மாறியதால் இங்கு வருகின்ற நோயாளிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துலுக்கன் குறிச்சி, அம்மையார் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் 100 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், கர்ப்பிணிகள் வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவுப் பகுதி , வளாகம் முழுவதுமே திறந்தவெளி கழிப்பறையாக மாறிவிட்டது. இதனால் இங்கு வருகின்ற நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளும் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர் .எனவே இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் திறந்தவெளி கழிப்பறையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

