ADDED : ஜன 06, 2026 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: முதல்வர் அளித்த தேர்தல் கால வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மங்காள், சுசீலாமேரி, குருநாதன், அங்கம்மாள், வசந்தா முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் லெசயாளர் சங்கரநாராயணன், மாநில துணைத் தலைவர் ராமசுப்புராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மகாலெட்சுமி பேசினர். மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜ் நன்றிக்கூறினார்.

