ADDED : பிப் 24, 2026 05:46 AM

விருதுநகர்: விருதுநகரில் பென்டகன் கார்மெண்ட்ஸ் நிறுவனம் பெண்கள் முன்னேற்றத்தின் 20ம் ஆண்டை கொண்டாடும் வகையில் பென்டா பெஸ்ட் 2026 விழா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜவஹர், இயக்குனர்கள் தலைமையில் நடந்தது. இதில் 20 ஆயிரத்திற்கும் பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து பென்டகன் ரெப்ளக்டர் துணியை மூன்று நிமிடங்கள் உயர்த்தி உலக சாதனை நிகழ்வில் ஈடுபட்டனர். இதை அமெரிக்காவை சேர்ந்த வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகள் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் உறுதி செய்து அங்கீகரித்தார்.
இதில் பேஜ் இண்டஸ்ட்ரீட்ஸ் நிறுவன மூத்த தலைவர் ஸ்ரீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, நிறுவன துணை தலைவர்கள் நரேந்திர பாபு, சுமித் பாந்த், பா.ஜ., மாநில துணை தலைவர் மாலேபதி சக்ரவர்த்தி, கே.ஜி., குரூப் இயக்குனர் வேலுசாமி, தாமோதரக்கண்ணன், வேலுச்சாமி, வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் நிர்வாக இயக்குனர் ஜவஹர், பெண்கள் முன்னேற்றம், பணியாளர் வளர்ச்சி, குடும்ப நலனில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பு குறித்து பேசினார்.

