sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

/

நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு


ADDED : நவ 12, 2025 12:07 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: கட்டனூரில் மலக் கசடு திட்டத்தை செயல்படுத்த கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தினர்.

நரிக்குடி பகுதிக்கான மலக்கசடு திட்டம் கட்டனூரில் உள்ள 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நரிக்குடி பகுதியில் செப்டிக் டேங்க் பயன்பாடு மிகக் குறைவு. இத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை.

அதற்காக செலவிடும் பணத்தை குடிநீர், நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஓடைகள், வரத்துக் கால்வாய்களை தூர் வார, ரோடு வசதி செய்து தர பயன்படுத்த வேண்டும் என கலெக்டர், ஆர்.டி.ஓ., குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மச்சேஸ்வரன், விவசாயி, கட்டனுார்: செப்டிக் டேங்க் கழிவுகளை கட்டனூரில் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மாசுபடும் சூழ்நிலை உள்ளது. விவசாயம் பாதிக்கப்படும்.

நீர்நிலைகள் மாசுபடும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான். அதனைப் பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் இப்பகுதியில் செயல்படுத்த விடமாட்டோம் என்றார்.






      Dinamalar
      Follow us