sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : அக் 15, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபர் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் 55. இவர் போட்டோகிராபராக உள்ளார். இவர் 2024 டிசம்பரில் ஒரு சடங்கு வீட்டு நிகழ்ச்சியை வீடியோ மற்றும் போட்டோ எடுக்க சென்றார். அப்போது அங்கு 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ராஜபாளையம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us