ADDED : மார் 08, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபுரம் தெற்கு தெரு மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை தனியார் ஆக்கிரமித்து அடைத்துள்ளதால் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை, பாதையை திறக்க கேட்டு வெங்கடாசலபுரம் சிந்தப்பள்ளி ரோட்டில் நேற்று திடீரென மறியல் செய்தனர்.
போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
