தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


ADDED : செப் 28, 2025 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பசுமை மன்றம், மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் செயலாக்கம் நிகழ்வாக சிறுகுளம் கண்மாயில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.

மெப்கோ பொறியியல் கல்லுாரி, அஞ்சாக் கலைக் கல்லுாரி, ஏ.ஏ.ஏ., கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 130 பேர், சிவகாசி மாநகராட்சி பணியாளர்கள் 40 பேர், பசுமை மன்றத்தினர் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார்.

840 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் ஆகியவை அகற்றப்பட்டன. மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன், பொறியாளர் ராமலிங்கம், சுகாதார துறையினர். கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர்.

பசுமை மன்ற நிர்வாகி பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக சிவகாசி மாநகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பொருட்கள் மீட்பு மற்றும் மறுசுழற்சி மையத்தில் பிரித்து, மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை பசுமை மன்றம் ஆராய்ந்து வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us