ADDED : மார் 19, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு, வி.ஐ.பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பா.ம.க., சார்பில் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் மாஸ்டர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 31வது வார்டில் முறையாக வடிகால், மின்விளக்கு வசதி செய்து தரப்பட வேண்டும். சொத்துவரி பாதாள சாக்கடை வரிகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.