மனநலம் பாதித்தவர் மாயம்
சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் புதுராஜ் 58. மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது சகோதரர் ஆபிரகாம் 70. பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். ஜூன் 5 வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
சாத்துார்: சாத்துார் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் 58. இவருக்கு சொந்தமான டூவீலர் மே 31 இரவு வீடு முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயமாகி இருந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் கொலை
சாத்துார்: சாத்துார் நல்லமுத்தன் பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 60. சில நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவிற்கு செலுத்திய வரி பணத்தை திரும்ப கேட்டு இவரது மகன்கள் பாண்டியராஜ் 42, செல்வபாண்டி 35, ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை லட்சுமணன் விலக்கி விட்ட போது ஆத்திரமடைந்த மகன் பாண்டியராஜ் கட்டையால் தாக்கினார். இதில் செல்வ பாண்டி, லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
சிவகாசி: எம்.புதுப்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.