6 பவுன் திருட்டு
விருதுநகர்: ஒண்டிப்புலிநாயக்கனுாரை சேர்ந்த சரவணக்குமார் 43. இவரது தாய் முத்துலெட்சுமி, தந்தை முருகன் 70, விருதுநகர் பாரதி நகர் 7வது தெருவில் வசிக்கின்றனர். தந்தை பெட்டிக்கடை நடத்தியும், தவணைக்கு பணம் கொடுத்தும் வருகிறார். ஜூன் 18 இரவு 7:15 மணிக்கு முருகன் நெஞ்சுவலியால் விருதுநகர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது தெரிந்தது. பீரோவில் இருந்த ஆறரை பவுன் திருடுபோனது. சரவணக்குமார் புகாரில் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை
விருதுநகர்: கே.உசிலம்பட்டியை சேர்ந்த 41 வயது பெண். தோட்டத்தில் காளான் வளர்ப்பு தொழில் செய்கிறார். ஜூன் 19 மாலை 5:10 மணிக்கு தோட்டத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் 23, பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பி ஓடினார். பெண் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.