/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி
/
கார் மோதி காயமடைந்தபோலீஸ்காரர் பலி
ADDED : ஆக 12, 2025 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே ராயர்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 34, ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சூலக்கரை போலீஸ் கேண்டீனில் பொருட்களை வாங்கி கொண்டு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் சென்ற கார் மோதியதில் கார்த்திக்ராஜா தலையில் பலத்த காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.