ADDED : செப் 19, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் கிராம ஊராட்சிகளிலேயே, பணிபுரியக்கூடிய ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தபால் மூலமாக அனுப்பினர்.

