ADDED : நவ 18, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.
கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

