sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

/

புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 06, 2025 03:31 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் கிராம மக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள புதிய நல்லதங்காள் சிலையை வைத்து வழிபடவும், அதற்கு கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் அண்ணன், தங்கை கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அர்ச்சனாபுரம் நல்லதங்காள் கோயில் சிலை ஜனவரி 26 அன்று கோயில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு சிலை உடைந்து கிடந்தது. வத்திராயிருப்பு போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் அர்ச்சனாபுரம் மக்கள் சார்பில் செய்யப்பட்ட நல்லதங்காள் சிலையை கோயிலில் வைத்து வழிபடவும், கும்பாபிஷேகம் நடத்தவும் அறநிலையத்துறை அனுமதிக்க வேண்டுமென கோரி நேற்று முத்தாலம்மன் திடலில் 300-க்கும் மேற்பட்ட மக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கோயில் ஆய்வாளர் முத்து மணிகண்டன் கூறுகையில், அறநிலையத்துறை சார்பில் புதிய நல்லதங்காள் சிலை நிறுவப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us