/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
/
நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : மே 09, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மே 10ல் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் இம்மாதத்திற்கான குறைதீர் முகாம், மே 10ல் மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது.பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி குடும்ப அட்டை தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம், என்றார்.

