/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளாம்பட்டியில் அதிவேகத்தில் செல்லும் குவாரி லாரிகளால் அச்சம்
/
விளாம்பட்டியில் அதிவேகத்தில் செல்லும் குவாரி லாரிகளால் அச்சம்
விளாம்பட்டியில் அதிவேகத்தில் செல்லும் குவாரி லாரிகளால் அச்சம்
விளாம்பட்டியில் அதிவேகத்தில் செல்லும் குவாரி லாரிகளால் அச்சம்
ADDED : டிச 30, 2025 06:12 AM
சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் அதி வேகத்தில் செல்லும் குவாரி லாரிகளால் பள்ளி மாணவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் லாரிகளை மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம், நதிக்குடி பகுதியில் கிரசர் குவாரி உள்ளது. இங்கு தினமும் விளாம்பட்டி, மாரனேரி வழியாக ஜல்லி கற்கள் கிராவல் துாசி எடுப்பதற்காக 100 க்கும் மேற்பட்ட முறை லாரிகள் வந்து செல்கின்றன. விளாம்பட்டியில் ஊருக்குள் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதில் சாதாரணமாகவே வாகனங்கள் சிரமப்பட்டுத்தான் சென்று வர வேண்டி உள்ளது. இங்கு ரோட்டின் அருகே இரு பள்ளிகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வரும் லாரிகள் அதிக வேகமாக செல்வதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வேகமாக வரும் லாரிகளை மெதுவாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

