/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
/
ராஜபாளையத்தில் கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ராஜபாளையத்தில் கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ராஜபாளையத்தில் கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
ADDED : ஜூன் 23, 2025 05:34 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் விற்பனை செய்யும் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு கேள்விக்குறியாகி வருகிறது.
ராஜபாளையம் நகராட்சி மற்றும் சுற்றுப் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், சாலையோர கடைகள், இறைச்சி, பழக்கடைகள் இயங்கி வருகின்றன.
பெரு நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் ஏட்டளவிலேயே உள்ளது. ரோட்டில் திறந்த வெளியில் உணவு பண்டங்களை தயாரிப்பதும், பயன்படுத்திய எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவது, உணவு பொருட்களில் அதிக அளவிலான நிறமிகள், முறையாக பதப்படுத்தாத இறைச்சி பயன்பாடு, காலாவதியான பொருட்கள் விற்பனை, உணவு பொருட்கள் தயாரிப்பில் தொழிலாளர்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை.
இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கணக்கு காட்டும் நோக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் புற்றீசல்களாக பிரியாணி கடை எனும் பெயரில் சாலையோரம் சுகாதாரமற்ற உணவு தயாரிப்புகள் நடைபெறுகிறது. மலிவான விலை என இவற்றை தொடர்ந்து வாங்கி உண்ணும் தொழிலாளர்கள், மக்கள் உடல் உபாதைக்கு ஆளாகின்றனர்.
உணவு தயாரிப்பு, விற்பனை அனைத்திலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.