/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய மழைநீர்
/
செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய மழைநீர்
செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய மழைநீர்
செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய மழைநீர்
ADDED : அக் 22, 2025 01:02 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி இருப்பதால் நோயாளிகள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துலுக்கன் குறிச்சி, அம்மையார் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் 100 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், கர்ப்பிணிகள் வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவுப் பகுதி, வளாகம் முழுவதுமே சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தேங்கிய தண்ணீரை கடந்துதான் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் நீண்ட நாட்கள் தண்ணீர் வற்றாததால் துர்நாற்றம் ஏற்பட்டு இங்கு வருபவர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளும் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். எனவே இங்கு மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.