sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ஜீயர் புகாரில் கைதான ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின்

/

ஸ்ரீவி., ஜீயர் புகாரில் கைதான ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின்

ஸ்ரீவி., ஜீயர் புகாரில் கைதான ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின்

ஸ்ரீவி., ஜீயர் புகாரில் கைதான ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின்


ADDED : டிச 27, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி சிவகாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் ஜூன் மாதம் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலைமை செயலகத்தில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் வீடியோ வெளியிட்டனர். மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி சக்திவேல்ராஜன் ஜீயர் சார்பில் அளித்த புகாரின் பேரில் ரங்கராஜன் நரசிம்மன், பெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் டிச. 16ல் வழக்கு பதிவு செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் புகாரில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது. இந்நிலையில், ஸ்ரீவி. ஜீயர் புகாரில் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் அவரை கைது செய்தனர்.

நேற்று சிவகாசி ஜே.எம்., 2ல் நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் முன் ரங்கராஜன் நரசிம்மனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை சொந்த ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புழல் சிறையில் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், சிவகாசி நீதிமன்றமும் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us