/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் இல்லாமல் திண்டாடும் ஊழியர்கள்
/
ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் இல்லாமல் திண்டாடும் ஊழியர்கள்
ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் இல்லாமல் திண்டாடும் ஊழியர்கள்
ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் இல்லாமல் திண்டாடும் ஊழியர்கள்
ADDED : மார் 14, 2024 02:56 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் இல்லாததால் ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 970 ரேஷன் கடைகள் உள்ளன. 60க்கும் மேற்பட்ட நடமாடும் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. இது தமிழக அளவில் உள்ள பிரச்னை. மக்களுக்கு பொருட்கள் வினியோகிக்க ஏதுவாக கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் அடிப்படை வசதியாக ஒரு கடையில் கூட கழிப்பறை வசதி இல்லை.
அப்பகுதி மக்களின் உதவியோடு அருகில் உள்ள வீடுகளில் தான் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடையில் விற்பனையாளர் பணியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் முன்னுாரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது போன்ற கழிப்பறை இல்லாத சூழல் அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
கோடை நேரங்களில் அதிகளவில் சிரமத்தை சந்திக்கின்றனர். 2023ல் நடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் கழிப்பறை கட்டும் பணிகள் விரைவில் துவங்கும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த துறையின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிதாக கட்டப்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதியோடு கட்டப்படும் என்றும், ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிடம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து பணிகளை செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி அளித்து விரைவில் ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள் கிடைக்க துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

