sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ரேஷன் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பாதிப்பு ஊழியர் சங்கம் கண்டனம்

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ரேஷன் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பாதிப்பு ஊழியர் சங்கம் கண்டனம்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ரேஷன் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பாதிப்பு ஊழியர் சங்கம் கண்டனம்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ரேஷன் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பாதிப்பு ஊழியர் சங்கம் கண்டனம்


ADDED : நவ 27, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்களை ஈடுபடுத்துவதால் பொது விநியோக திட்டம் பாதிக்கப்படுகிறது என பொது விநியோக ஊழியர் சங்க பொருளாளர் ராமசாமி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., படிவங்களை சேகரித்து, அவற்றை மாலை 3:00 மணிக்குள் உரிய அதிகாரிகளிடம் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்தவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கொடுக்கும் போது தவறாகஇருப்பதை திருத்தம் செய்து அவற்றை சரியாக பூர்த்தி செய்து கொடுக்க முடியும்.

படிவங்கள் நிராகரிக்கப்பட்டால் ரேஷன் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்காமல் போனதற்கு ரேஷன் ஊழியர்கள் மீது மக்கள் கோபமடைந்தனர். பொது விநியோகத் திட்டத்தில் கைரேகை வைத்தல், எடை மிஷினோடு ப்ளுடூத் இணைத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது.

தாயுமானவர் திட்டப்பணிகள், மாத இறுதியில் இருப்பு சரிபார்த்து ஒப்படைத்தல், அடுத்த மாதத்திற்கான ஒதுக்கீடு பொருட்களை இறக்கும் நடவடிக்கைகளால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். பணியையும் கொடுத்தால் பெரும் சிரமம் ஏற்படும். எனவே ரேஷன் கடை ஊழியர்களை இந்த பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us