sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நுாலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் துர்நாற்றத்தால் வாசகர்கள் முகம் சுளிப்பு

/

நுாலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் துர்நாற்றத்தால் வாசகர்கள் முகம் சுளிப்பு

நுாலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் துர்நாற்றத்தால் வாசகர்கள் முகம் சுளிப்பு

நுாலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் துர்நாற்றத்தால் வாசகர்கள் முகம் சுளிப்பு


ADDED : ஜன 02, 2024 04:57 AM

Google News

ADDED : ஜன 02, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: வலுக்கலொட்டியில் நூலகத்தைச் சுற்றி மாட்டுச்சாணம் மற்ற கழிவு பொருட்களை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் வாசகர்கள் நூலகத்திற்கு வர தயங்குகின்றனர்.

காரியாபட்டி வலுக்கலொட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக நூலகம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நூலகத்தைச் சுற்றி அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் மாடுகள் வளர்த்து வருபவர்கள், மாட்டுச் சாணம், கோழிக் கழிவுகள், இதர கழிவுப் பொருட்களை நூலகத்தை சுற்றி கொட்டி வருகின்றனர்.

துர்நாற்றம் வீசுவதால் நூலகத்தில் உட்கார்ந்து படிக்க முடியவில்லை என கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ரூ. 3.40 செலவில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. உள்ளாட்சி நிர்வாகம் சார்பாக மரக்கன்றுகளை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாடு வளர்ப்போர் கம்பி வேலியை உடைத்து மாட்டுச்சாணம், கோழிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி வருகின்றனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நூலகத்திற்கு வாசகர்கள் வர முடியவில்லை. ஆர்வமுள்ள பலர் வர தயங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மூலம் நூலகத்தை சுற்றி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us