நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா காலேஜ் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். மதுரை ஓட்டல் ஹெரிடேஜ் எப் அண்ட் பி மேலாளர் செந்தில்குமார், மனிதவள மேலாளர் தமிழ்ச்செல்வம் பேசினர். மாணவர்களிடம் தங்களது துறையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கினர். உதவி பேராசிரியர் சங்கர் ராஜ் நன்றி கூறினார்.

