/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு தொல்லை உறவினருக்கு சிறை
/
சிறுமிக்கு தொல்லை உறவினருக்கு சிறை
ADDED : ஜூலை 05, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் செல்வம் 49.கூலித் தொழிலாளியான இவர் 2024 மார்ச் 23ல் தனது உறவினரின் 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. செல்வத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.