sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : டிச 03, 2024 05:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ., அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை ராஜபாளையம் தெற்கு போலீசார் கை து செய்தனர்.

அய்யனாபுரத்தில உள்ள ஊரணியை சுற்றி 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்டியதோடு நடைபாதையில் மாடுகளை கட்டி தடை ஏற்படுத்தி வந்தார். இதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வி.ஏ.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றி தருவதாக வருவாய் துறையினர் உறுதி அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று வருவாய் துறையினர் ஆக்கிரமித்தவரின் வீடு , மாட்டு தொழுவத்தினை அகற்றியதோடு அதைச் சுற்றி ஆக்கிரமிப்பில் இருந்த மற்றொரு வீடு ,இரண்டு விசைத்தறி கூடங்களையும் அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யனாபுரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us