sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூன் 11, 2025 07:14 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் அருகே ரோட்டில் இருபுறத்திலும் இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.

சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் உள்ளது. அனைத்து பொருட்களும் இங்கு கிடைப்பதால் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் எப்பொழுமே போக்குவரத்து நிறைந்திருக்கும்.

இந்நிலையில் இந்த ரோட்டில் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ரோட்டில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

கமிஷனர் கூறுகையில், நகரில் எங்கு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் பாரபட்சம் இன்றி அகற்றப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் போலீசார் மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us