ADDED : பிப் 27, 2026 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: அம்ரித் பாரத்திட்ட திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ரூ. 7 கோடி செலவில் நடைமேடை உயர்த்துதல், ஓய்வறை, பார்க்கிங், நிழற்குடை, தங்கும் அறை, டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதனை மார்ச் 1ல் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதையடுத்து நேற்று மாலை 4:30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.
ஒரு சில குறைபாடு களை உடனடியாக சரி செய்ய அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். ரயில்வே துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

