/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் தொடரும் விபத்து அபாயம்
/
பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் தொடரும் விபத்து அபாயம்
பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் தொடரும் விபத்து அபாயம்
பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் தொடரும் விபத்து அபாயம்
ADDED : செப் 22, 2024 02:30 AM
சிவகாசி:பட்டாசு ஆலைகளை உள் குத்தகைக்கு விடுவதால் உயிர்ப்பலி அபாயம் நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. சில ஆலைகளில் பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு தயாரிப்பதால் உயிர்பலிகள் ஏற்படுகின்றன.
பட்டாசு ஆலை வைப்பதற்காக உரிமம் பெற்ற ஒருவர், தனது ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுகின்றனர். இதுவே விதிமீறல் என்ற நிலையில் குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுவதால் கூடுதல் விதிமீறல் நடக்கிறது.
உதாரணமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது 40 அறைகள் இருக்கும். இந்த 40 அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது.
பட்டாசு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் அறையின் அளவைப் பொறுத்து அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் அறையில் இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பட்டாசு ஆலைகள் இந்த விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. உள் குத்தகைக்கு எடுத்த நபர்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக அதிக ஆட்களை வைத்து அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர்.
மரத்தடியில் பாதுகாப்பின்றி பணி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த விதிமீறல் ஆலைகளில் கூலி அதிகமாக கிடைப்பதால் தொழிலாளர்கள் தெரிந்தே தவறு செய்கின்றனர்.
தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன் பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு உள் குத்தகைக்கு விடப்பட்டதும், ஏழாயிரம்பண்ணை அருகே நடந்த வெடி விபத்திற்கும் விதிமீறலுமே காரணம்.
எந்த விபத்து நடந்தாலும் அதில் பட்டாசு ஆலை உரிமையாளர் சிக்குவதில்லை. மேலாளர் போர்மேன் போன்றவர்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள். ஆலை உரிமையாளர்கள் குத்தகைக்கு விடுவதோடு சரி. அதன் பின்னர் கண்டு கொள்வதில்லை.
ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இந்த தவறு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.
தீபாவளி நெருங்கும் நிலையில் விதிமீறி பட்டாசு தயாரிப்பு அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.