/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்
/
பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்
ADDED : நவ 23, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி; திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு ஊர் மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் 4 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. நேற்று மதியம் 1 மணிக்கு ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள், இந்திய கம்யூ.,வினர் ரோட்டில் மறியல் செய்தனர்.
பரளச்சி எஸ்.ஐ., மாரியப்பன், தமிழ்நாடு போக்குவரத்து கழக கமுதி கிளை மேலாளர் ராஜ்குமார் , அதிகாரிகள் ஊர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் ஊருக்கு பஸ் வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

