sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால்

/

தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால்

தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால்

தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால்


ADDED : மே 27, 2025 12:31 AM

Google News

ADDED : மே 27, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால், எரியாத தெரு விளக்குகள் என சிவகாசி அருகே செங்கமலப்பட்டி ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

பராசக்தி காலனி, முருகன் காலனி உள்ளடக்கிய செங்கமலபட்டி ஊராட்சியில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராதது முக்கிய பிரச்னையாக உள்ளது. பராசக்தி காலனியில் மேட்டுப்பகுதியில் குடிநீர் வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். ரோடும் சேதம் அடைந்துள்ளது.

விநாயகர் கோயில் அருகிலும், முருகன் காலனியிலும் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களம் சேதம் அடைந்துள்ளது. உசிலம்பட்டி செல்லும் வழியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலத்தில் ரோடு சேதம் அடைந்துள்ளது.

சுகாதாரக்கேடு


கோபால்சாமி, அனைத்து தெருக்களிகளுமே வாறுகால் துார்வார வில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி தெருவில் தேங்குகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே தினமும் வாறுகாலை துார்வார வேண்டும்.

பல்லாங்குழியான ரோடு


செல்வம், செங்கமலப்பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம், நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர். இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டு குழியமாக மாறிவிட்டது. எனவே சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

சேதமான சுகாதாரவளாகம்


சுப்புராம், இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயனற்றதாக உள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் சேதம் அடைந்து விட்டது. இதில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தாழ்வான மின்வயர்களால் ஆபத்து


சக்கனன், மெயின் ரோட்டில் உயர் அழுத்த மின் வயர்கள் தாழ்வாகச் செல்கின்றது. ஒரு சில மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us