UPDATED : ஜூன் 18, 2026 05:29 PM
ADDED : ஜூன் 18, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி:மதுரை மாவட்டம் கள்ளிக்குடி மருதங்குடியை சேர்ந்தவர் வெள்ளைமருதன் 52.
நரிக்குடி அருகே பூம்பிடாகையில் உறவினரின் இறப்புக்கு டூவீலரில் சென்று, பின் ஊர் திரும்பினார். அப்பகுதி பழத்தோட்டம் அருகே வந்த போது, எதிரே டூவீலரில் வந்த இருவர் வெள்ளை மருதனை வழிமறித்து மிரட்டி, அவரிடம் இருந்த அலைபேசி, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். அ.முக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
