ADDED : பிப் 04, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் ராமமூர்த்தி செய்திக் குறிப்பு: சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பிப். 5 முதல் பிப். 9 வரை காலை 10:15 முதல் மாலை 5:00 மணி வரை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், மேற்பார்வையாளர்கள் தரத்தில் ஆலைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நபர்களை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து பிப். 5 காலை 10:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.