நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை வகித்தார். வெள்ளூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி முன்னிலை வகித்தார். சூலக்கரை எஸ்.ஐ., கார்த்திகா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்தனர்.