ADDED : அக் 14, 2024 08:58 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடந்தது.
தாளாளர் திருப்பதி செல்வன் வரவேற்றார். முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார். இரண்டு நாள் நடந்த கண்காட்சியை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
187 மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஓய்வு கல்வி அலுவலர் பொன்னம்பலம் தாசில்தார் ராம சுப்பிரமணியம், ஆர்.ஐ., சுந்தர்ராஜ் சிறப்பு விருதினராக பங்கேற்றனர்.
