நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை திருவிழா நடந்தது.
விழாவில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை (விதைகள்) இயக்குனர் உமாராணி, முன்னாள் இயக்குனர் நடராஜன்,வேளாண்மை இணை இயக்குனர் சுமதி ,விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் பேசினர்.
பேராசிரியர் ராஜா, இணை பேராசிரியர் கதிரவன், உதவி செயற்பொறியாளர் முத்தையா, உதவி இயக்குனர் கோகிலா, விதை பரிசோதனை அலுவலர் சிவகாமி, மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் வேணுதேவன் நன்றி கூறினார்.

