sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செவல்பட்டி ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமிப்பு

/

செவல்பட்டி ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமிப்பு

செவல்பட்டி ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமிப்பு

செவல்பட்டி ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமிப்பு


ADDED : அக் 06, 2024 04:37 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியிலிருந்து திருவேங்கடம் செல்லும் ரோட்டில் ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் நான்கு விலக்கு ரோட்டில் இருந்து திருவேங்கடம் செல்லும் ரோட்டில் ஓரத்தில் சிறிய ஓடை உள்ளது. அதை கழிவு நீர் , கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளது.

இந்த ஓடை அருகே அங்கன்வாடி மையம், துணை சுகாதார மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இயங்கி வருகின்றது. ஓடையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகின்றது.

இதில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள அங்கன்வாடி மையம் குழந்தைகளை கடிப்பதால் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் துணை சுகாதார மையத்திற்கு வருகின்ற மக்களும் இதனால் அவதிப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் கழிவுநீர் ஓடையை விட்டு வெளியேறி துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம் வளாகம் முழுவதுமே தேங்கி விடுகின்றது, எனவே ஓடையை துார்வாரி கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us