ADDED : பிப் 23, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கல்லூரியில் மத்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் சமர்த் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் தையல் பயிற்சி துவக்க விழா நடந்தது.
கல்லூரிக்கு 25 புதிய பவர் தையல் மெஷின் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக 200 மாணவிகளுக்கு தையல் பயிற்சி நடத்தி அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
தையல் மெஷின்கள் தர்ம ரத்தினா செயல்திறன் பயிற்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பாளர் மாரிதுரை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். இயக்குனர் ராஜ் நவீன், சாம்சங் நிறுவன ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், செயலாளர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.

