sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு

/

குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு

குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு

குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு


ADDED : ஜன 30, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 30, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு, ஆகாய தாமரை, கழிவுநீர் கலக்கம் போன்றவைகளால் கொண்டனேரி கண்மாய் பாசன விவசாயிகள் திணறி வருகின்றனர்.

ராஜபாளையம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கொண்டனேரி கண்மாய் 112 ஏக்கர் பாசன பரப்புடன் உள்ளது. ஆண்டாண்டு காலமாக நகர்பகுதிக்கு நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீருக்கு முக்கிய பங்கு வகித்து வந்தது. நாளடைவில் குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்கும் இடமாக மாறியதால் உபயோகிக்க முடியாத தன்மை அடைந்து விட்டது.

இதனால் பாசனத்திற்கான மண்வளமும் பாதிக்கப்பட்டு விளையும் நெல்லும் தரம் குறைந்து விட்டது. நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் செயலை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்காததால் இதே நிலை தொடர்கிறது. நகராட்சி அருகே குடியிருப்பு ஒட்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, கட்டட கழிவுகள், குப்பை கொட்டி சுருங்கியும், குடியிருப்பு கழிவு நீர் கலப்பால் ஆகாய தாமரை முட்கள் படர்ந்தும் காணப்படுகிறது.

நீர் தேங்கும் இடமும் வெளியேறும் இடமும் மண்மேவி சமமாகிவிட்டது. நீண்ட காலமாக கண்மாய் துார் வாராமல் வைத்துள்ளதுடன் தனியார் பங்களிப்புடன் கண்மாயை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us